திங்கள், 13 டிசம்பர், 2010

நீலகேசி சமயதிவாகர வாமனமுனிவர் உரைப்பதிப்பு (1936)

       ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றாகக் கருதப்பெறும் நீலகேசியின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை . நீலகேசிக்கு உரை எழுதியவர் சமயதிவாகர வாமனமுனிவர் என்பர். நீலகேசியின் மூலமும் உரையும் 1936இல் கும்பகோணம் அரசுக் கல்லூரியின் முதல்வராக இருந்த பேராசிரியர் சக்ரவர்த்தி என்பரால் பதிப்பிக்கப்பட்டன. இப்போது தெரிந்தவரையில் நீலகேசி யின் மூலம், உரை ஆகியவற்றுக்கு இதுவே முதல்பதிப்பாகலாம். 

        இப்பதிப்பின் தலைப்புப் பக்கம் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது. முகவுரை, நூலாராய்ச்சி முதலியனவும் ஆங்கிலத்திலேயே தரப்பட்டுள்ளன. அப்பகுதி 340 பக்கங்களுக்கு மேலாக அமைந்துள்ளது.  அதனைத் தொடர்ந்துவரும் தமிழ்ப் பகுதி 480-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டுள்ளது. அப்பதிப்பின் தலைப்புப் பக்கம் இதோ!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...