சனி, 25 டிசம்பர், 2010

பத்துப்பாட்டு - உ.வே.சா. பதிப்பு 1961

             சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்கத்தொடங்கியது உ.வே.சா. அவர்களுக்கும், தமிழ்ப் பதிப்பு வரலாற்றுக்கும் எண்ணற்ற நன்மைகளை வழங்கியது என்பது வரலாறு காட்டும் உண்மை. அவ்வகையில் சீவக சிந்தாமணியை ஆராய்ந்து வந்தகாலத்தில் உ.வே.சா. அறிந்துகொண்ட நூல்களுள் ஒன்று பத்துப்பாட்டு. அக்காலத்தில் சங்க நூல்கள் எவையெவை என்ற தெளிவு பெரும்புலவர்களுக்கும் இருந்ததில்லை என்பதை உ.வே.சா.வின் என் சரித்திரத்தால் அறியலாம்.

           பத்துப்பாட்டின் மூலப்பகுதி தனியே கிடைக்காமையால் உரையிலிருந்தும், உரைமேற்கோள்களிலிருந்தும் மூலபாடத்தைப் பெயர்த்து எழுதிக்கொண்டார் உ.வே.சா.  பின்னர்க் கிடைத்த சிலசுவடிகளில் சிலபாடல்களின் மூலப்பகுதிகள் கிடைத்தன. இவற்றைக்கொண்டு முன்பு எழுதிவைத்த பகுதிகளைத் திருத்தம் செய்துகொண்டார். சில சிறுதொடர்களுக்கு அவற்றின் உரைப்பகுதி கிடைக்கவில்லை. எனினும் பத்துப்பாட்டு மூலம், உரை ஆகியன 1889 ஆம் ஆண்டில் முதற்பதிப்பாக உ.வே.சா.வால் வெளியிடப்பட்டன. அதன் இரண்டாம் பதிப்பு 1918-லும்,  மூன்றாம் பதிப்பு 1931 - லும் வெளிவந்துள்ளன. இரண்டாம் பதிப்பைக்காட்டிலும் மூன்றாம் பதிப்பில் 300 பக்கங்கள் அதிகமாக இருப்பதினாலேயே இதிற் பல புதிய விசயங்கள் சேர்க்கப்பெற்றுள்ளனவென்பதை அறிஞர்கள் அறிந்துகொள்வார்கள் என மூன்றாம் பதிப்பின் முகவுரையில் உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.

              உ.வே.சா.அவர்கள் காலத்தில் வெளிவந்த மூன்றாம் பதிப்பு, 1961இல் தியாகராச வெளியீடாக 1961 மீண்டும் வெளியிடப்பட்டது. அதன் தலைப்புப் பக்கம் இது.


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...