வெள்ளி, 24 டிசம்பர், 2010

சங்க இலக்கியம் - வையாபுரிப்பிள்ளை பதிப்பு 1967

          சங்க இலக்கியம் என்ற பெயரிய பதிப்பு ஒன்று 1940இல் சைவசித்தாந்த மகா சமாசத்தால் வெளியிடப்பட்டது. அறிஞர் கழகம் ஆராய்ந்து உருவாக்கிய அப்பதிப்பின் தொகுப்பாசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் அமைந்தவர் வையாபுரிப்பிள்ளை ஆவார்.  இப்பதிப்பு திருத்தமாக வெளிவரவேண்டும் என்பதற்காக 1933 முதல் பணிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. அதன் விளைவாகச் சங்கநூற் புலவர்கள் பெயர் அகராதி ஒன்று தொகுக்கப்பட்டு அது அவ்வாண்டில் வெளிவந்த தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையின் பொன்விழா மலரில் வெளியிடப்பட்டது.  பின்னர்ச்  சைவசித்தாந்த மகா சமாசத்தால் 1934- லில் மீண்டும் வெளியிடப்பட்டது. அதனைக் கண்ட தமிழ் ஆர்வலர்கள் பலரும் அவ்வரிசையிலேயே சங்க நூல்களை மூலமும் உரையுமாக வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளைச் சமாசத்திடம் முன் வைத்தனர்.  இதனை ஏற்றுக்கொண்ட சமாசத்தினர் அதன் முதற்படியாக மூலத்தை மட்டும் செம்மையாக அச்சிட முடிவு செய்தனர். கிடைக்கின்ற சுவடிகள், அச்சுப்படிகள் கையெழுத்துப் படிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு,  அவற்றை ஒப்புநோக்கி சிறந்தபாடங்களைக் கண்டு அமைத்தனர். சங்க இலக்கிய ஆராய்ச்சிக்கு ஒரு சிறுகருவியே இப்பதிப்பு என்ற குறிப்புடனும், இதனைக் குறிப்பு நூலாகக் கருத வேண்டுமேயொழிய எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் முலமும் உரையுமாக வெளிவந்துள்ள அருமையான பதிப்புக்களுக்குப் பதில் இதைப் பயன்படுத்தலாம் எனக் கனவிலும் எண்ணி ஏமாற்றமடைதல் கூடாது என்ற எச்சரிக்கைக் குறிப்புடனும் வெளிவந்துள்ள இப்பதிப்பு புலவர் பெயரடைவில் சங்கப் பாடல்களைத் தொகுத்துத் தந்த முதற்பதிப்பாகும்.

             சங்க இலக்கியப் பதிப்பு மூலம் மட்டுமே கொண்ட பதிப்பாகும். பல்வகையானும் சிறப்புடைய இப்பதிப்பு இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர் 1967-லில் சென்னை பாரி நிலையத்தால் இரண்டாம் பதிப்பாக வண்டுள்ளது. அமைப்பு முறையில் முதற்பதிப்பிலிருந்து சிற்சில மாறுதல்களடன் வெளிவந்துள்ள இதன் தலைப்புப் பக்கங்கள் வருமாறு :



கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...