வியாழன், 16 டிசம்பர், 2010

அகநானூறு – பொ.வே.சோமசுந்தரனார் உரைப்பதிப்பு 1970

    அகநானூற்றின் முதற்பகுதியாகிய களிற்றியானைநிரை (கடவுள் வாழ்த்து முதல் 120 ஆம் பாடல் வரை) பகுதிக்குப் பொ.வே.சோமசுந்தரானார் எழுதிய விளக்கவுரையின் முதற்பதிப்பு 1970 ஆம் ஆண்டு மேத் திங்களில் வெளிவந்தது. அகநானூற்றுக்குப் பழையவுரை ஒன்று உண்டு. அதன் பின்னர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் கரந்தைக் கவியரசு ஆர்.வேங்கடாசலம் அவர்களும் புத்துரை எழுதியுள்ளனர் ஆகிய செய்திகள் இப்பதிப்பின் பதிப்புரைக்கண் கூறப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் இவ்வுரைப் பதிப்பு வெளிவந்துள்ளது. 


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...