வியாழன், 2 டிசம்பர், 2010

தொல்காப்பியத்திற்குப் பாடவேறுபாட்டு நோக்கிலமைந்த முதற்பதிப்பு

தொல்காப்பியத்திற்குப் பல பதிப்புக்கள் வெளிவந்திருப்பினும் அந்நூலின் பாடவேறுபாடுகள் அனைத்தையும் தருகின்ற முதற்பதிப்பாக அமைந்துள்ளது பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம் 1996 இல் வெளியிட்டுள்ள “தொல்காப்பிய மூலம் பாடவேறுபாடுகள் - ஆழ்நோக்காய்வு” என்ற பதிப்பாகும். 20 ஆண்டுகால உழைப்பால் வெளியான இப்பதிப்புக்குக் கே.எம்.வேங்கடராமையா, ச.வே.சுப்பிரமணியன், ப.வெ.நாகராசன் ஆகியோர் பதிப்பாசிரியர்களாவர். இப்பதிப்புக்கு முன்னர் வந்த 89 பதிப்புக்களையும் ஒப்புநோக்கிப் பதிப்பித்த பெருமைக்குரியது இப்பதிப்பாகும். அதன் தலைப்புப் பக்கத் தோற்றம் இதோ!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...