புதன், 22 டிசம்பர், 2010

குறுந்தொகை - துரை. இராசாராம் தெளிவுரைப் பதிப்பு 2005

          குறுந்தொகைக்குக் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஒய்வுபெற்ற தமிழாசிரியர் துரை இராசாராம் எழுதிய தெளிவுரை, சென்னை திருமகள் நிலையத்தால் 2005 பிப்ரவரியில் முதற்பதிப்பாக வெளிவந்தது. எளிய நடையில் தெளிவுரை தரப்பட்டுள்ளது என்றும்,  வேண்டிய இடங்களில் அரும்பொருள், உள்ளுறை, பாடலாசிரியர் பற்றிய குறிப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன் என்றும் இந்நூலின் முன்னுரையில் உரைகாரர் குறிப்பிட்டுள்ளார்.

         1.திணைத்தலைப்பு, 2. பாடல், 3. புலவர் பெயர், 4. கூற்றுக் குறிப்பு, 5. தெளிவுரை, 6. சிறப்புரை என்ற அமைப்புடையது இத்தெளிவுரைப் பதிப்பாகும். இவ்வுரைப் பதிப்பு 2008 அக்டோபரில் இரண்டாம் பதிப்பாக வந்துள்ளது. இங்கு 2005 ஆம் ஆண்டு வந்த முதற்பதிப்பின் தலைப்புப் பக்கம் தரப்பட்டுள்ளது. 2008- லும் இதேபக்கமே தரப்பட்டுள்ளது.

                                                             

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...