வெள்ளி, 24 டிசம்பர், 2010

தொல்காப்பியம் - பி.சா.சு. உரைப்பதிப்பு 1937

          தொல்காப்பியம் ஏறத்தாழ 200 பதிப்புக்களைக் கண்ட தமிழ்ப்பெருநூலாகும். அந்நூற்குப் பலரும் தத்தம் நோக்கில் உரையெழுதி வருகின்றனர். ஒவ்வொருவருடைய நோக்கமும் தொல்காப்பியர் கூறியகருத்தை எடுத்துரைக்க வேண்டும் என்பதே. அதனாலேயே அந்நூற்கு உரைகள் பல்கியுள்ளன. அவ்வகையில் பி.எசு. சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தைக் குறிப்புரையுடன் 1937 -லில் வெளியிட்டார்.

             திருப்பனந்தாள் காசிமடத்தின் தலைவர் சுவாமிநாதத் தம்பிரான் அவர்களின் பொருளுதவியைக் கொண்டுப் பி.எசு. சுவாமிநாதனால் பதிப்பிக்கப்பட்ட இப்பதிப்பைச் சுவாமிநாதத் தம்பிரானுக்கே உரிமையாக்கியுள்ளார் இக்குறிப்புரைகாரர்.  இந்நூலில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் தனித்தனியே தலைப்புப் பக்கங்கள் தரப்பட்டுள்ளன.

           குறிப்புரை என உரைகாரர் கூறினாலும் இவ்வுரை பொழிப்புரை, விளக்கவுரை ஆகியவற்றைக் கொண்டதாகும். பாடவேறுபாடுகளும் தரப்பட்டுள்ளன. இப்பதிப்பின் தலைப்புப் பக்கங்கள் வருமாறு:  





கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...