அகநானூற்றுக்குப் பழைய உரை ஒன்றுண்டு. அவ்வுரை முதல் 90 பாடல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்த 70 பாடல்களுக்கு அகநானூற்றின் முதற்பதிப்பாசிரியராகிய வே.இராசகோபாலாச்சாரியார் உரை எழுதியுள்ளார். ஆனால் அகநானூறு முழுமைக்குமான முதல் உரையைத் தற்காலத்தில் எழுதியவர்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் கரந்தைக் கவியரசு ஆர்.வேங்கடாசலம்பிள்ளை அவர்களும் ஆவர். இவ்வுரை மூன்று பகுதிகளாக வெளியிடப்பட்டது. இரண்டாம்பகுதியாகிய மணிமிடைபவளம் 1946 சனவரியில் முதற்பதிப்புக் கண்டது. அதன் மறுஅச்சுக்கள் 1949,1955,1959 ஆகிய ஆண்டுகளில் வந்துள்ளன. 1959இல் வெளிவந்த மறுஅச்சின் தலைப்புப் பக்கம் இது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறப்புடைய இடுகை
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள் காந்தள் குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...
-
தொல்காப்பிய அகத்திணை இயல்: பிரிவின் வகைகள் - மூன்று 27. ஓதல் பகையே தூதிவை பிரிவே .(அகத்.27) மேல் கைக்கிளை முதலாக எழுதிணையு முணர்த்...
-
பாட்டியல் என்பது செய்யுள் இலக்கணத்தினுள் ஒரு பிரிவாகும். பன்னிரு பாட்டியல் என்பது இங்கு ஆகுபெயராய் நின்று பன்னிருவரால் இயற்றப்பட்ட ...
-
அகத்திணையியல் இரண்டாம் நூற்பா – உலகப் பகுப்பு 2. அவற்றுள் , நடுவண் ஐந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே (அகத். 2)...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக