வெள்ளி, 17 டிசம்பர், 2010

அகநானூறு - ந.மு.வே. உரைப் பதிப்பு 1959


             அகநானூற்றுக்குப் பழைய உரை ஒன்றுண்டு. அவ்வுரை முதல் 90 பாடல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்த 70 பாடல்களுக்கு அகநானூற்றின் முதற்பதிப்பாசிரியராகிய வே.இராசகோபாலாச்சாரியார் உரை எழுதியுள்ளார். ஆனால் அகநானூறு முழுமைக்குமான முதல் உரையைத் தற்காலத்தில் எழுதியவர்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் கரந்தைக் கவியரசு ஆர்.வேங்கடாசலம்பிள்ளை அவர்களும் ஆவர். இவ்வுரை மூன்று பகுதிகளாக வெளியிடப்பட்டது. இரண்டாம்பகுதியாகிய மணிமிடைபவளம் 1946 சனவரியில் முதற்பதிப்புக் கண்டது. அதன் மறுஅச்சுக்கள் 1949,1955,1959 ஆகிய ஆண்டுகளில் வந்துள்ளன. 1959இல் வெளிவந்த மறுஅச்சின் தலைப்புப் பக்கம் இது.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...