வியாழன், 23 டிசம்பர், 2010

குறுந்தொகை - சுஜாதா அறிமுக விளக்கப்பதிப்பு 2006


          குறுந்தொகைக்கு வாணியம்பாடி மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்த அரங்கசாமி ஐயங்கார் 1915 ஓர் உரையெழுதிப் பதிப்பித்திருப்பதாகத் தெரிகிறது.  உ.வே.சாமிநாதையர் 1937இலில் பதிப்பித்த விரிவான உரைதான் நமக்குக் கிடைத்த சொத்து. அது இல்லையேல் நாம் குறுந்தொகையை இழந்திருப்போம். குறுந்தொகையில் உ.வே.சா. உரைதான் மிகச் சிறந்தது. அவ்வுரையிலிருந்து மாறுபட அசாத்திய தைரியம் வேண்டும். உ.வே.சா. உரை பாடலின் முழுத் தாக்கத்தையும் உணர்ந்துகொள்ளும் சுதந்திரத்தைக் குறைக்கின்றது. குறுந்தொகைப் பாடல்களைச் செய்யுள்களாகப் பார்க்காமல் கவிதைகளாகப் பார்ப்பதற்கு உரைகாரர் சிலசமயம் தடையாக இருக்கின்றார். ஒவ்வொரு பாடலையும் ஆசுப்பத்திரி சுத்தத்துடன் அணுகாமல் கண்ணீரும் வியர்வையும் பரிவும் பிரிவும் துரோகமும் நட்பும் கொண்ட நவகவிதைகளாகப் பார்க்கவைப்பதே இந்நூலின் குறிக்கோள் எனக்கூறும் சுஜாதா குறுந்தொகைக்கு எளிய அறிமுகம் ஒன்றைத் தந்துள்ளார். அப்பதிப்பு 2006 திசம்பரில் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. குறுந்தொகை முழுமைக்குமான எளிய புதுக்கவிதை அறிமுகமாக அமைந்த அதம் தலைப்புப் பக்கம் இது.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...