1. கூற்றுத் தலைப்பு, 2. கூற்று, 3. கூற்று விளக்கம், 4. பாடல், 5. திணை,புலவர் பெயர், 6. கொண்டுகூட்டு, 7. தெளிவுரை, 8. அருஞ்சொற்பொருள், 9. சிறப்புக்குறிப்பு ஆகிய உரைக்கூறுகளைக் கொண்டது குறுந்தொகை உரைப்பதிப்பாகும். 2002 ஏப்பிரல் எனப் பதிப்பாண்டு குறிக்கப்பட்டுள்ள இதன் தலைப்புப் பக்கம் இதோ.
வியாழன், 23 டிசம்பர், 2010
குறுந்தொகை - தமிழண்ணல் உரை 2002
குறுந்தொகை சங்க நூல்களில் மிகுதியான உரைகாரர்களால் எடுத்தாளப்பெற்ற நூல் மட்டுமல்ல, மிகுதியான பதிப்புக்களைப் பெற்ற நூலுமாகும். அவ்வகையில் கோவிலூர் மடாலயம் சங்க நூல்கள் மக்களுக்கு எளிதில் புரியவேண்டும் என்ற நோக்கத்தில் சந்திபிரித்த மக்கள் பதிப்புக்களை வெளியிட்டது. அப்பதிப்பு வரிசையில் பெரும்பேராசிரியராகிய தமிழண்ணல் அவர்கள் குறுந்தொகைக்கு உரையெழுதியுள்ளார். மக்கள் பதிப்பு எனச்சுட்டப்பெறும் இச்சங்க நூற்பதிப்புக்களுக்குத் தமிழண்ணல், சுப.அண்ணாமலை ஆகியோர் முதன்மைப் பதிப்பாசிரியர்களாவர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக