திங்கள், 22 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 13

இலக்கணம் - தொல்காப்பியம்

61.       தொல்காப்பியச் சொல்வடிவங்களின் எண்ணிக்கை? 
5630.

62.      தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இக்காலச் சான்றோர் சிலரைச் சுட்டுக?
அரசன் சண்முகனார், சோமசுந்தரபாரதியார், புலவர் குழந்தை மற்றும் பலர்.

63.      தொல்காப்பியர் கூறியுள்ள ஆறுவகைத் தொகைகள் யாவை? 
வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, உவமத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை ஆகியன (சொல்.42).

64.      தொல்காப்பியர் கூறிய ஆறுவகைத் தொகைகளைக் கூறும் பிற்கால இலக்கண நூல்கள்? 
நேமிநாதம் (சொல். 60), நன்னூல் (362), இலக்கண விளக்கம் (335), முத்துவீரியம் (94), தொன்னூல் விளக்கம் (89).

65.      உம்மைத்தொகை ஆறு நிலைகளில் அமையும் எனக் கூறும் இலக்கண நூல்கள்? 
தொல்காப்பியம் (சொல். 417), இலக்கண விளக்கம் (34).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...