புதன், 24 ஆகஸ்ட், 2011

தமிழ்ப்பேரவை ஆய்வரங்கு 17.08.11

     புதுவை தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறையில் தமிழ்ப்பேரவை என்ற மாணவர் அமைப்பு கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்கள் தலைவர் பொறுப்பேற்றது முதல் சீரிய முறையில் செயல்பட்டுத் துறையையும், புதிய புதிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார். தமிழ்ப்பேரவைக்கு ஆண்டுதோறும் ஒரு பேராசிரியர் பொறுப்பாளராகவும் இருந்து நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். இவ்வாண்டு பேராசிரியர் ப. கொழந்தசாமி அவர்கள் பொறுப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார். தமிழ்ப்பேரவையின் 40 ஆண்டுத் தொடக்கவிழாவும் ஆய்வரங்கமும் கடந்த 17.08.11 அன்று நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் செல்வம் அவர்கள் ஒலியுறுப்புக்கள் பற்றிய காணொலிக் காட்சிப் படங்களைத் திரையிட்டு உரையாற்றினார். நான் சங்க இலக்கியக் காட்சிகள் - பயிர்கள் என்ற பொருளில் சங்க இலக்கியப் பயிரினங்கள் பற்றிய காட்சிப்படம் ஒன்றும், குறிஞ்சித்திணை பற்றிய குறும்படம் ஒன்றும் திரையிட்டு விளக்கினேன். குறும்படம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தயாரித்த படமாகும். நவீனக் கருவிகளைக் கொண்டு கற்பிப்பது காலத்தின் தேவை என்பதை உணர்த்தும் வகையில் அந்நிகழ்ச்சி அமைந்தது. அந்நிகழ்ச்சி பற்றிய தினமலர் நாளிதழ்ச் செய்தி இது.




கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...