சனி, 27 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 16

இலக்கணம் - ஐந்திலக்கணம்

தொன்னூல் விளக்கம் (18 நூற்.)

1.         ஐந்திலக்கண நூலாகிய தொன்னூல் விளக்கத்தை இயற்றியவர்? 
பெஸ்கி என்ற வீரமாமுனிவர்.

2.         தொன்னூல் விளக்க நூற்பாக்கள்? 
370 நுற்பாக்கள்.

3.         தொன்னூல் விளக்கத்தின் உரைகாரர்? 
நூலாசிரியரான வீரமாமுனிவர்.

4.         தொன்னூல் விளக்கப் பகுப்பு? 
எழுத்ததிகாரம் (40 நூற்பா), சொல்லதிகாரம் (102 (நூற்பா), பொருளதிகாரம் (58 நூற்பா) யாப்பதிகாரம் (100 நூற்பா), அணியதிகாரம் (70 நூற்பா) ஆக ஐந்து அதிகாரங்களும் 370 நூற்பாக்களும் கொண்டது தொன்னூல் விளக்கம்.

5.         அகத்திணைப் பொருட்களுள் (முதல், கரு, ரிப்பொருட்கள்) வீரமாமுனிவர் கூறாத பொருள்?
ரிப்பொருள் (முதல், கருப்பொருட்களைக் கூறியுள்ளார்).

6..        தொன்னூல் விளக்க முதற்பதிப்பு வெளிவந்த ஆண்டு?
1838 இல் (புதுவையிலிருந்து வெளிவந்தது).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...