வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 10

தொல்காப்பியம் - இலக்கணம்

46.      தொல்காப்பியர் கூறும் ஆண்பால் பெயர்கள்
எருது, ஏற்றை, ஏறு, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன், ஆண்.

47.      தொல்காப்பியர் கூறும் பெண்பால் பெயர்கள்
பேடை, பெடை, பெட்டை, , பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவல், பிணவு, பிணா, பிடி.

48.      தன்காலத்தும், தனக்கு முன்னரும் வாழ்ந்த புலவர்களைத் தொல்காப்பியர் சுட்டும் இடங்கள் எத்தனை?
260 இடங்கள்.

49.      தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்குப் பிற்பட்டது என்ற கருத்தைக் கூறியவர்
எஸ். வையாபுரிப் பிள்ளை (இக்கருத்து பொருந்தாதது என்பதை அறிஞர் பலரும் வெளிப்படுத்தியுள்ளனர்).

50.      தொல்காப்பியரால் கூறப்பட்டுச் சங்கப் பாடல்களில் வழக்கற்றுப் போன சொற்கள் சிலவற்றைக் கூறுக
அதோளி (அவ்விடம்) இதோளி, உதோளி, எதோளி என்ற சொற்கள் (தொல்காப்பிய எழுத்து, 159 ஆம் நூற்பா).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...