புதன், 24 ஆகஸ்ட், 2011

பாரதி அன்பர்கள் அறக்கட்டளை மாதக்கூட்டம் 11.08.11

   புதுவையில் பாரதி அன்பர்கள் அறக்கட்டளை ஒன்று கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகின்றது. எழுத்தாளர் கி.ரா., பேராசிரியர் க. பஞ்சாங்கம், பேராசிரியர் சிவ. மாதவன் ஆகியோர் இவ்வமைப்பை நடத்தி வருபவர்களுள் குறிப்பிடத்தக்கோர் ஆவார். பாரதி இலக்கியங்களைப் பற்றிய சொற்பொழிவு ஒன்றை மாதந்தோறும் 11 ஆம் நாளன்று நிகழ்த்திவருகின்றது. கடந்த 11.08.11 அன்று நடைபெற்ற 154ஆம் மாதக்கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. பேராசிரியர் சிவ. மாதவன் அவர்கள் இவ்வாய்ப்பினை வழங்கினார். பாரதியின் உரைநடை இலக்கியங்கள் என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் உரையாற்றினேன். தவிர்க்க இயலாத காரணங்களால் நிழற்படங்கள் எடுக்க இயலவில்லை. ஓர் இலக்கிய அமைப்பு தொடர்ந்து 154 மாதங்களாக நிகழ்ச்சி நடத்தி வருவது இன்றியமையாத செய்தி. எனவே, செய்தியைப் பதிவு செய்து வைத்தேன்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...