சனி, 27 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 17

இலக்கணம் - ஐந்திலக்கணம்

முத்துவீரியம் (19 நூற்)

1.         முத்துவீரப்ப உபாத்தியாயர் எழுதிய நூல்? 
முத்துவீரியம்.

2.         முத்துவீரியம் எவ்வகை இலக்கண நூல்? 
ஐந்திலக்கண நூல்.

3.         முத்துவீரிய நூற்பகுப்பு?
எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அணியதிகாரம் என ஐந்து அதிகாரங்களும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் மூன்று இயல்கள் என 15 இயல்களும், தற்சிறப்புப்பாயிரம் நீங்கலான 1288 நூற்பாக்களும் கொண்டது.

4.         கோயில், கோயில் ஆகிய இரண்டனுள் பண்டை நூல் வழக்குடைய தொடர்?
கோயில் (19ஆம் நூற்றாண்டுவரைக் கோவில் என்ற தொடருக்கு இலக்கிய, உரை வழக்காறு இல்லை. கோவில் என்ற தொடருக்கு இலக்கண அமைதி கூறியோர் நன்னூலார், முத்துவீரப்ப உபாத்தியாயர் ஆகியோர் ஆவார்).

5.         சிறுபொழுதுகள் பற்றிய முத்துவீரியப் புதுநெறி என்ன?
சிறுபொழுது ஆறு என்பதும் ஐந்து என்பதும் இருவகைநெறிகள். நாற்கவிராச நம்பியைப் பின்பற்றிச் சிறுபொழுது 5 எனக் கூறும் முத்துவீரியம், அச்சிறுபொழுதுகளில் நிகழும் நிழ்ச்சிகளை எடுத்துரைப்பது பிற நூல்களில் காணப்பெறாத புதுநெறியாகும்.

1 கருத்து:

Admin சொன்னது…

அன்பான தமிழ் வலைப் பதிவர்களுக்கு வணக்கம்.

"தேன்கூடு" தமிழ் வலைப் பதிவு திரட்டி சில நண்பர்களின் உதவியுடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.

தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...