திங்கள், 26 அக்டோபர், 2015

குறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 5)

                                    குறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 5)

மருதம்
            வயலும் வயலைச் சார்ந்த இடங்களும் மருதமாகும். இந் நிலத்து ஊர்களில் நாகரிகம் மிக்க மக்கள் இல்லறம் நடத்தும் செய்திகளைப் புலவர்கள் புனைந்துரைக்கின்றனர். மருத நிலத் தலைவன் ஊரன், மகிழ்நன் எனப்படுவான்.
      உழவர் தம்மேல் பூந்தாது படியும்படி காஞ்சி மரக் கிளையை வளைப்பதும், எருமைக் கன்றைக் கட்டி வைப்பதும், ஒற்றை ஏருடைய உழவன் ஈரம் உண்டான நிலத்தில் விதைக்க விரைவதுமாகிய செய்திகள் இந்நூலில் காணும் மருத நில நிகழ்ச்சிகளாம்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...