ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: நிகழ்ந்தது கூறலும் திணையே

தொல்காப்பிய அகத்திணை இயல்: நிகழ்ந்தது கூறலும் திணையே

47. நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே. (அகத். 47)

இதுவும் அது.( இதுவும் பாலைக்கு நினைத்தற்கு மரபு உணர்த்துதல் நுதலிற்று).

(இதன் பொருள்): நிகழ்ந்தது கூறி நிலையலும் திணை - முன்பு நிகழ்ந்ததனைக் கூறிப் போகா தொழிதலும் பாலைத் திணையாம்.

உதாரணம்:

"ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப்
பொரியரை வேம்பின் புள்ளி நீழற்
கட்டளையன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
வில்ஏர் உழவர் வெம்முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை
உள்ளினென் அல்லனோ யானே உள்ளிய
வினைமுடித் தன்ன இனியோள்
மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே." (நற்றிணை -3)
(அகத். 47).




கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...