வெள்ளி, 9 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: குறிஞ்சி முதற்பொருள் – கூடுதல் பருவம்

தொல்காப்பிய அகத்திணை இயல்: குறிஞ்சி முதற்பொருள் – கூடுதல் பருவம்

8    பனிஎதிர் பருவமும் உரித்தென மொழிப. (அகத்.8)

இஃது, எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.

(இதன் பொருள்):பனிஎதிர் பருவமும் உரித்து என மொழிப - (குறிஞ்சித் திணைக்கு) முன்பனிக்காலமும் உரித்தென்று சொல்லுவர்.

இதனைக் கூதிர்க்காலத்தோடு ஒருங்கு கூறாமையின், அத்துணைச் சிறப்பிற்று அன்றெனக் கொள்க. குறிஞ்சி என்றது அதிகாரத்தான் வந்தது.


முன்பனிக் காலமாவது மார்கழித் திங்களும் தைத் திங்களும். உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. (அகத்.8).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...