தொல்காப்பிய
அகத்திணை இயல்: ஓதற்பிரிவுக்கு உரியோர்
33. உயர்ந்தோர்க்
குரிய ஓத்தி னான1 (அகத். 33)
இது, வணிகர்க்கு உரியதோர் பிரிவு உணர்த்துதல்
நுதலிற்று.
(இதன்
பொருள்): உயர்ந்தோர்க்கு - மேல் அதிகரிக்கப்பட்ட பின்னோராகிய
இருவகையோரிலும் உயர்ந்தோராகிய வணிகர்க்கு, ஒத்தின்னா உரிய - ஓதுதல்
நிமித்தமாகப் பிரிதலும் உரித்து.
ஓத்துப்
பலவாதலின் ' உரிய ' என்றார். ஈண்டு ஓத்து என்பது வேதம்; அது நால்வகை
வருணத்தினும் மூவர்க்கு உரிய தென்பது இத்துணையெனக் கூறப்பட்டது. (அகத். 33).
குறிப்பு விளக்கம்
1. வேதந்தோன்றிய
பின்னர் அது கூறிய பொருள்களை இவையும் ஆராய்தலின் ஓத்தினான் என்று அவற்றிற்குப்
பெயர் கூறினார்; ஓத்து என்பது வேதத்தையே ஆதலின். (நச்சி.).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக