செவ்வாய், 13 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: ஓதற்பிரிவுக்கு உரியோர்

தொல்காப்பிய அகத்திணை இயல்: ஓதற்பிரிவுக்கு உரியோர்

33. உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான1 (அகத். 33)

இது, வணிகர்க்கு உரியதோர் பிரிவு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): உயர்ந்தோர்க்கு - மேல் அதிகரிக்கப்பட்ட பின்னோராகிய இருவகையோரிலும் உயர்ந்தோராகிய வணிகர்க்கு, ஒத்தின்னா உரிய - ஓதுதல் நிமித்தமாகப் பிரிதலும் உரித்து.

ஓத்துப் பலவாதலின் ' உரிய ' என்றார். ஈண்டு ஓத்து என்பது வேதம்; அது நால்வகை வருணத்தினும் மூவர்க்கு உரிய தென்பது இத்துணையெனக் கூறப்பட்டது. (அகத். 33).

குறிப்பு விளக்கம்


1. வேதந்தோன்றிய பின்னர் அது கூறிய பொருள்களை இவையும் ஆராய்தலின் ஓத்தினான் என்று அவற்றிற்குப் பெயர் கூறினார்; ஓத்து என்பது வேதத்தையே ஆதலின். (நச்சி.).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...