தொல்காப்பிய
அகத்திணை இயல்: ஏனை உவமம் திணை உணர்த்தும் முறை
52. ஏனை உவமம் தானுணர்
வகைத்தே.(அகத். 52)
இஃது, ஏனை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இதன்
பொருள்): ஏனை உவமம் தான் உணர் வகைத்து - உள்ளுறை யொழிந்த உவமம் தான்
உணரும் வகையான் வரும்.
தான்
உணரும் வகையாவது, வண்ணத்தானாதல் வடிவானாதல்
பயனானாதல் தொழிலானாதல் உவமிக்கப்படும் பொருளொடு எடுத்துக் கூறுதல். [ஏகாரம்
ஈற்றசை].
அது வருமாறு உவமவியலுட் கூறப்படும்.
இதனால் திணை உணருமாறு;
"வளமலர் ததைந்த
வண்டுபடு நறும்பொழில்
முளைநிரை முறுவல் ஒருத்தியொடு
நெருநல்
குறிநீ செய்தனை யென்ப அலரே
குரவ நீள்சினை உறையும்
பருவ மாக்குயிற் கௌவையிற்
பெரிதே." (ஐங்குறு. 369)
இஃது ஊடற் பொருண்மைத்தேனும், வேனிற்காலத்து நிகழும் குயிற்குரலை
உவமித்தலிற் பாலைத்திணையாயிற்று. குரவம் - குராமரம்.
"உரைத்திசிற்
றோழியது புரைத்தோ அன்றே
துருக்கங் கமழும் மென்தோள்
துறப்ப என்றி இறீஇயர்என்
உயிரே." (சிற்றட்டகம்)
இது துருக்கம் என உவமை கூறுதலாற்
குறிஞ்சியாயிற்று. (அகத். 52)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக