தொல்காப்பிய
அகத்திணை இயல்: உள்ளுறையின் நிலைக்களன்கள்
50. உள்ளுறை தெய்வம்
ஒழிந்ததை நிலம்எனக்
கொள்ளும் என்ப குறிஅறிந் தோரே.
(அகத். 50)
இஃது, உள்ளுறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று,
(இதன்
பொருள்): உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை - உள்ளுறையாவது
கருப்பொருட்டெய்வம் ஒழிந்த பொருளை, நிலம் என கொள்ளும் என்ப
குறி அறிந்தோர் - இடமாகக் கொண்டுவரும் என்று சொல்லுவர் இலக்கணம் அறிந்தோர்.
குறி
– இலக்கணம். (அகத். 50).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக