தொல்காப்பிய
அகத்திணை இயல்: மனைக்கண் பிரிதலும் பிரிவே
41.அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே.(அகத்.41)
இதுவும், பாலைக்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல்
நுதலிற்று.
(இதன்
பொருள்): அயலோராயினும். (சேரியினும் சுரத்தினும் பிரிதலன்றித்) தமது
மனையயற்கண் பிரிந்தாராயினும், அகற்சிமேற்றே -
பிரிவின்கண்ணதே.
எனவே, ஓர் ஊரகத்து மனையயற்கண்ணும் பரத்தையிற்
பிரிவு பாலையாம் என்பதூஉம் உய்த்துணர்ந்து கொள்ளப்படும். (அகத். 41).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக