தொல்காப்பிய
அகத்திணை இயல்: பொருள் ஒழுக்கத்தான் அமையும்
36. உயர்ந்தோர்
பொருள்வயின் ஒழுக் கத்தான.1 (அகத். 36)
இஃது, அந்தணர் பொருட்குப் பிரியுந்திறன்
உணர்த்துதல் நுதலிற்று.
(இதன்
பொருள்): உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான - உயர்தோராகிய அந்தணர்
பொருள்வயிற் பிரியுங்காலத்து ஒழுக்கத்தானே பிரிப.
இதனாற்
சொல்லியது, வணிகர்க்கும்
வேளாளர்க்கும் வாணிகம் முதலாயின பொருணிமித்தம் ஆகியவாறுபோல, அந்தணர்க்கு
இவை பொருணிமித்தம் ஆகா என்பதூஉம், அவர்க்கு இயற்கை
யொழுக்கமாகிய ஆசாரமும், செயற்கையொழுக்கமாகிய கல்வியுமே
பொருட்குக் காரணமாம் என்பதூஉம் கண்டவாறு. [ஈற்றகரம் சாரியை.] (அகத். 36).
குறிப்பு விளக்கம்
1. இவ்வடியை
மேற்சூத்திரத்துடன் இணைத்து ஒன்றாக்கியும், "உயர்ந்தோர்க்
குரிய ஓத்தி னான," என்று அவ்வோத்தினை
அவரொழுக்கத்திலேயான பொருளென்றும் கூறுவர். (நச்சி.).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக