தொல்காப்பிய
அகத்திணை இயல்: குறிஞ்சி முதற்பொருள்
7 1குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர். (அகத்.7)
இது,
குறிஞ்சிக்குக் காலம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இதன் பொருள்):
குறிஞ்சி - குறிஞ்சித் திணைக்குக் காலமாவது, கூதிர் யாமம்
என்மனார் புலவர் - கூதிர்க்காலமும் யாமப்பொழுதும் என்று கூறுவர் புலவர்.
கூதிராவது
ஐப்பசித் திங்களும் கார்த்திகைத் திங்களும் யாமமாவதுஇராப்பொழுதின் நடுக்கூறு. (அகத்.
7).
குறிப்பு
விளக்கம்
1. 6,7, சூத்திரங்களை ஒரே சூத்திரமாக்குவர்
நச்சினார்க்கினியர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக