தொல்காப்பிய
அகத்திணை இயல்: வேந்து வினை பிறருக்கும் உரியது
34. வேந்துவினை இயற்கை
வேந்தன்1 ஒரீஇய
ஏனோர்2 மருங்கினும் எய்திடன் உடைத்தே.(அகத். 34)
இது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் உரியதோர் பிரிவு
உணர்த்துதல் நுதலிற்று.
(இதன்
பொருள்): வேந்து வினை இயற்கை - வேந்தனது வினை இயற்கையாகிய தூது,
வேந்தன் ஒரீஇய ஏனோர் மருங்கினும் - வேந்தனை ஒழிந்த வணிகர்க்கும்
வேளாளர்க்கும், எய்து இடன் உடைத்து - ஆகுமிடன் உடைத்து.
வேந்தனது வினை - வேந்தற்குரிய வினை. ' இடனுடைத்து ' என்றதனான்
அவர் தூதாங்காலம் அமைச்சராகிய வழியே நிகழும் என்று கொள்க. [ஏகாரம் ஈற்றசை.]. (அகத்.
34).
குறிப்பு விளக்கம்
(பாடவேறுபாடு): 1.
வேந்தனின்.
(பாடவேறுபாடு): 2. ஏனோர்
- குறுநில மன்னர். (நச்சி.).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக