தொல்காப்பிய அகத்திணை இயல்: நெய்தல்
முதற்பொருள்
10 1எற்பாடு,
நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்.
(அகத். 10)
இது, நெய்தல் திணைக்குக் காலம் உணர்த்துதல்
நுதலிற்று.
(இதன்
பொருள்): எற்பாடு - எற்படுபொழுது, நெய்தல்
ஆதல் மெய்பெற தோன்றும் - நெய்தற்றிணைக்குக் காலமாதல் பொருண்மை பெறத் தோன்றும்.
எற்பாடாவது
பகற்பொழுதின் பிற்கூறு. (அகத். 10)
குறிப்பு விளக்கம்
1. 9,10 சூத்திரங்களை
ஒரே சூத்திரமாக்குவர் நச்சினார்க்கினியர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக