ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: கைக்கிளை மரபு

தொல்காப்பிய அகத்திணை இயல்: கைக்கிளை மரபு

55.முன்னைய நான்கும்1முன்னதற் கென்ப. (அகத். 55)

இது கைக்கிளைக்குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று .

(இதன் பொருள்): முன்னைய நான்கும் - மேற்சொல்லப்பட்ட நான்கினும் முந்துற்ற நிலைமை நான்கும் , முன்னதற்கு என்ப முற்கூறப்பட்ட கைக்கிளைக்காம் என்ப.

அவையாவன:- ஏறா மடற்றிறம் , இளமை தீராத்திறம் , தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம் , மிக்க காமத்தின் மாறாகாத்திறம் என்பன .

ஏறாமடற்றிறம் வெளிப்பட இரத்தலாம் , இளமை தீராத்திறம் , நலம் பாராட்டலாம் . தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம் , புணராவிரக்கமாம். மிக்க காமத்தின் மாறாகாத்திறம் , நயப்புறுத்தலாம்.

இவை ஒருவாற்றான் உணர்த்தியவாறு.

"கைக்கிளை செந்திறம் பெருந்திணை நோந்திறம்
அத்திறம் இரண்டும் அகத்திணை மயங்காது
அத்திணை யானே யாத்தனர் புலவர்."

இதனானே கைக்கிளை இன்பம் பயப்ப வருமென்பதூஉம் , பெருந்திணை துன்பம் பயப்ப வருமென்பதூஉம் அறிந்துகொள்க .

குறிப்பு விளக்கம்


1.முன்னைய நான்கும் : இயற்கைப் புணர்ச்சிக்கு முன் நிகழ்ந்த காட்சியும் ஐயமும் தெரிதலும் தேறுலும் என்ற குறிப்பு நான்கும். (நச்சி.)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...