தொல்காப்பிய
அகத்திணை இயல்: கைக்கிளை மரபு
55.முன்னைய நான்கும்1முன்னதற் கென்ப. (அகத். 55)
இது
கைக்கிளைக்குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று .
(இதன்
பொருள்): முன்னைய நான்கும் - மேற்சொல்லப்பட்ட நான்கினும் முந்துற்ற
நிலைமை நான்கும் , முன்னதற்கு என்ப முற்கூறப்பட்ட
கைக்கிளைக்காம் என்ப.
அவையாவன:-
ஏறா மடற்றிறம் , இளமை தீராத்திறம் ,
தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம் , மிக்க
காமத்தின் மாறாகாத்திறம் என்பன .
ஏறாமடற்றிறம்
வெளிப்பட இரத்தலாம் , இளமை தீராத்திறம் ,
நலம் பாராட்டலாம் . தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம் , புணராவிரக்கமாம். மிக்க காமத்தின் மாறாகாத்திறம் , நயப்புறுத்தலாம்.
இவை ஒருவாற்றான் உணர்த்தியவாறு.
"கைக்கிளை
செந்திறம் பெருந்திணை நோந்திறம்
அத்திறம் இரண்டும் அகத்திணை மயங்காது
அத்திணை யானே யாத்தனர் புலவர்."
இதனானே கைக்கிளை இன்பம் பயப்ப
வருமென்பதூஉம் , பெருந்திணை துன்பம்
பயப்ப வருமென்பதூஉம் அறிந்துகொள்க .
குறிப்பு விளக்கம்
1.முன்னைய நான்கும் :
இயற்கைப் புணர்ச்சிக்கு முன் நிகழ்ந்த காட்சியும் ஐயமும் தெரிதலும் தேறுலும் என்ற
குறிப்பு நான்கும். (நச்சி.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக