தொல்காப்பிய
அகத்திணை இயல்: திணைமயக்கம் – பூ, புள் மயங்கும்
21.எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும். (அகத்.
21)
இது, மேலதற்கு ஒரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று.
(இதன்
பொருள்): எ நிலமருங்கின் பூவும் புள்ளும் - யாதானும் ஒரு நிலத்திற்
குரிய பூவும் புள்ளும், அ நிலம் பொழுதொடு வாராவாயினும் அந்
நிலத்தொடும் பொழுதொடும் வந்தில வாயினும், வந்த நிலத்தின்
பயத்த ஆகும் - வந்த நிலத்தின் பயத்த ஆகும்.
"வந்தது கொண்டு வாராதது முடித்தல் " (மரபு . 412) என்பதனால் சிறுபான்மை ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க; இவ்வாறு வருவன திணை மயக்கம் அன்றென்றவாறு.1 (அகத். 21)
குறிப்பு விளக்கம்
1. "வினைசெய்
இடத்தின் நிலத்தின் காலத்தின்" (தொல். சொல். 81) நிலத்தின்
பயத்தவாமெனப் பொழுதினையும் நிலம் என்றார். (நச்சி.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக