சனி, 10 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: திணைமயக்கம் – பூ, புள் மயங்கும்

தொல்காப்பிய அகத்திணை இயல்: திணைமயக்கம் – பூ, புள் மயங்கும்

21.எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும். (அகத். 21)

இது, மேலதற்கு ஒரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): எ நிலமருங்கின் பூவும் புள்ளும் - யாதானும் ஒரு நிலத்திற் குரிய பூவும் புள்ளும், அ நிலம் பொழுதொடு வாராவாயினும் அந் நிலத்தொடும் பொழுதொடும் வந்தில வாயினும், வந்த நிலத்தின் பயத்த ஆகும் - வந்த நிலத்தின் பயத்த ஆகும்.

"வந்தது கொண்டு வாராதது முடித்தல் " (மரபு . 412) என்பதனால் சிறுபான்மை ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க; இவ்வாறு வருவன திணை மயக்கம் அன்றென்றவாறு.1 (அகத். 21)

குறிப்பு விளக்கம்


1. "வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்" (தொல். சொல். 81) நிலத்தின் பயத்தவாமெனப் பொழுதினையும் நிலம் என்றார். (நச்சி.)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...