தொல்காப்பிய
அகத்திணை இயல்: பகைப்பிரிவி வேந்தன்
தானே செல்லலும், பிறரோடு செல்லலும் உண்டு
29. தானே சேறலுந்
தன்னொடு சிவணி1
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே.
(அகத். 29)
இது, பகைவயிற் பிரிதற்குரிய தலைமக்களை உணர்த்துதல்
நுதலிற்று.
(இதன்
பொருள்): தானே சேறலும் - (பகைவர் காரணமாகி அரசன்) தானே சேறலும்,
தன்னொடு சிவணி ஏனோர் சேறலும் - அவனொடு கூடி ஒழிந்தோர் சேறலும்,
வேந்தன் மேற்று - வேந்தன் கண்ணது.
பகை
யென்றது மேனின்ற அதிகாரத்தான் உய்த்துணர்ந்து கொள்ளக்கிடந்தது. 'தானே' என்பதன் ஏகாரம்
பிரிநிலை; படையை யொழிய என்றவாறு. போரைக் குறித்துப்
பிரிதலும் அரசர்க்கு உரித்தென்று கொள்க. இதனுள் அரசன் தலைமகனாயுழிப் பகைதணிவினைப்
பிரிவு எனவும், அவனொடு சிவணி ஏனோர் தலைவராயுழி வேந்தற்குற்றுழிப்
பிரிவு எனவும் இதனை இரு வகையாகக் கொள்க. [ஏகாரம் ஈற்றசை.] (அகத். 29)
குறிப்பு விளக்கம்
(நூற்பாப் பாடவேறுபாடு) 1. சிவணிய.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக