திங்கள், 12 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: பகைப்பிரிவி வேந்தன் தானே செல்லலும், பிறரோடு செல்லலும் உண்டு

தொல்காப்பிய அகத்திணை இயல்: பகைப்பிரிவி வேந்தன் தானே செல்லலும், பிறரோடு செல்லலும் உண்டு

29. தானே சேறலுந் தன்னொடு சிவணி1
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே. (அகத். 29)

இது, பகைவயிற் பிரிதற்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): தானே சேறலும் - (பகைவர் காரணமாகி அரசன்) தானே சேறலும், தன்னொடு சிவணி ஏனோர் சேறலும் - அவனொடு கூடி ஒழிந்தோர் சேறலும், வேந்தன் மேற்று - வேந்தன் கண்ணது.

பகை யென்றது மேனின்ற அதிகாரத்தான் உய்த்துணர்ந்து கொள்ளக்கிடந்தது. 'தானே' என்பதன் ஏகாரம் பிரிநிலை; படையை யொழிய என்றவாறு. போரைக் குறித்துப் பிரிதலும் அரசர்க்கு உரித்தென்று கொள்க. இதனுள் அரசன் தலைமகனாயுழிப் பகைதணிவினைப் பிரிவு எனவும், அவனொடு சிவணி ஏனோர் தலைவராயுழி வேந்தற்குற்றுழிப் பிரிவு எனவும் இதனை இரு வகையாகக் கொள்க. [ஏகாரம் ஈற்றசை.] (அகத். 29)

குறிப்பு விளக்கம்


(நூற்பாப் பாடவேறுபாடு) 1. சிவணிய.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...