தொல்காப்பிய
அகத்திணையியல் நான்காம் நூற்பா: முதற்பொருளாவது நிலமும் பொழுதும்
4. முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே (அகத். 4)
இது,
மேற்சொல்லப்பட்ட மூன்று வகைப் பொருளினும் முதற்பொருள் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
(இதன் பொருள்): முதல்
எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பு - முதல் என்று சொல்லப்படுவது நிலமும்
காலமும் ஆகிய அவ்விரண்டினது இயற்கை, என மொழிப இயல்பு
உணர்ந்தோர் -என்று சொல்லுவர் உலகின் இயல்பு உணர்ந்தோர்.
இயற்கை
என்பதனால்1செய்துகோடல் பெறாமை அறிந்து கொள்க.
நிலம் என்பதனால் பொருள்தோற்றுதற்கு இடமாகிய ஐம்பெரும் பூதமும் கொள்க. [ஏகாரம்
ஈற்றசை]. (அகத். 4)
குறிப்பு
விளக்கம்
1. (உரைப்பாட வேறுபாடு) : செய்துகோட் பெருமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக