தொல்காப்பிய
அகத்திணை இயல்: திணைப்பெயர்கள் – தலைமக்கள் பெயர்
23.ஆயர் வேட்டுவர்
ஆடூஉத் திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே.(அகத்.23)
இது, நிறுத்தமுறையானே முல்லைக்குரிய மக்கட்பெயர்
உணர்த்துதல் நுதலிற்று.
(இதன்
பொருள்): ஆடூஉ திணைப்பெயர் ஆயர் வேட்டுவர் - ஆண் மக்களைப்பபற்றி
வரும் திணைப்பெயர் ஆயர் எனவும் வேட்டுவர் எனவும் வரும். ஆவயின் வரும். கிழவரும்
உளர் - அவ்விடத்து வரும் கிழவரும் உளர்.
ஆயர்
என்பார் நிரைமேய்ப்பார். வேட்டுவர் என்பவர் வேட்டைத் தொழில் செய்வார். அஃது எயினர்
என்னும் குலப்பெயருடையார் மேல் தொழிற்பெயராகி வந்தது. "வந்தது கொண்டு வாராதது
முடித்தல் " (மரபு. 112) எனபதனான்
ஆய்ச்சியர் எனவும் கொள்க. அவ்விரு திறத்தாரும் காடு பற்றி வாழ்தலின் அந்நிலத்தின்
மக்களாயினார். அவ்வயின் வரூஉம் கிழவர் இருவகையர், அந்நிலத்தை
ஆட்சி பெற்றோரும், அந்நிலத்து உள்ளோரும் என. 'குறும்பொறைநாடன் ' என்பதுபோல்வன ஆட்சிபற்றி வரும். 'பொதுவன் ஆயன், என்பன குலம் பற்றி வரும். [சுட்டு
நீண்டு இசைத்தது. ஏகாரம் ஈற்றசை.]. (அகத். 23)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக