தொல்காப்பிய அகத்திணை இயல்: முதற்பொருள் இரு
வகைப்படும்
19.முதல்எனப் படுவ தாயிரு வகைத்தே.(அகத்.19)
இதுவும், ஐயம் அறுத்தலை நுதலிற்று.
(இதன்
பொருள்): முதல் எனப்படுவது மேல் எடுத்தோதப்பட்டவற்றில் முதல் என்று
சொல்லப்படுவது, ஆ இருவகைத்து - நிலமும் காலமும் ஆகிய
அவ்விருவகையை உடையது.
எனவே, ஏனையவெல்லாம் உரிப்பொருள் என்றவாறாம். இதனாற்
பெற்றது என்னை எனின், முதல் கரு உரிப்பொருள் என அதிகரித்து
வைத்தார்; இனிக் கருப்பொருள் கூறுகின்றார்; உரிப்பொருள் யாண்டுக் கூறினார் என ஐயம் நிகழும்; அது
'விடுத்தல்' என்க. [சுட்டு நீண்டு
நின்றது.]. (அகத்.19).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக