தொல்காப்பிய
அகத்திணை இயல்: பொருட் பிரிவுக்கு
உரியோர்
31.மேலோர் முறைமை
நால்வர்க்கும்1 உரித்தே.(அகத். 31)
இது, நிறுத்த முறையானே அறம்காரணமாகப் பிரிதற்குரிய
தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று.
(இதன்
பொருள்): மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்து- மேலோராகிய தேவரது
முறைமையை நிறுத்தற்குப் பிரியும் பிரிவு நான்கு வருணத்தார்க்கும் உரித்து. [ஏகாரம்
ஈற்றசை]. (அகத். 31).
குறிப்பு விளக்கம்
1.'மேலோர் முறைமை
ஏனோர்க்கும் உரித்தே' என்னாது 'நால்வர்க்கும்
உரித்தே' என்றது, முற்கூறிய வணிகரை
ஒழிந்த இருவகை வேளாளரையும் கூட்டி என்றுணர்க. (நச்சி.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக