தொல்காப்பிய
அகத்திணை இயல்: உள்ளுறை உவமம் – திணை உணரத் துணையாகும்
49.உள்ளுறை உவமம் ஏனை
உவமம் எனத்
தள்ளாது1
ஆகுந் திணையுணர் வகையே. (அகத். 49)
இஃது, உவம வகையான் ஐந்திணைக்கும் உரியதோர் இயல்பு
உணர்த்துதல் நுதலிற்று.
(இதன்
பொருள்): உள்ளுறை உவமம் ஏனை உவமம் என - உள்ளுறைக்கண் வரும் உவமமும்
ஒழிந்த உவமமும் என இருவகையாலும், திணை உணர்வகை தள்ளாது
ஆகும். - திணை உணரும் வகை தப்பாதாகும். [ஏகாரம் ஈற்றசை.]
உதாரணம்
முன்னர்க் காட்டுதும். (அகத். 49).
குறிப்பு விளக்கம்
1.இனித் தள்ளாது
என்றதனானே ' பாஅல் அஞ்செவி ' என்னும்
பாலைக் கலியுள் தாழிசை மூன்றும் ஏனையுவமமாய் நின்று கருப்பொருளோடு கூடிச்
சிறப்பியாது தானே திணைப்பொருள் தோன்றுவித்து நிற்பன போல்வனவும், ' கரைசேர் வேழம் கரும்பிற்பூக்கும், துறை கேழூரன் '
(ஐங்குறு - 12) என்றாற் போலக் கருப்பொருள்
தானே உவமமாய் நின்று உள்ளுறைப்பொருள் தருவனவும்,பிறவும்
வேறுபட வருவனவும் இதனான் அமைக்க. இது புறத்திற்கும் பொது.
இதனான்
உள்ளுறை உவமமும், ஏனை உவமமுமென உவமம்
இரண்டே என்பது. (நச்சி.).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக