ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: உள்ளுறை உவமம் – திணை உணரத் துணையாகும்

தொல்காப்பிய அகத்திணை இயல்: உள்ளுறை உவமம் – திணை உணரத் துணையாகும்

49.உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்
தள்ளாது1 ஆகுந் திணையுணர் வகையே. (அகத். 49)

இஃது, உவம வகையான் ஐந்திணைக்கும் உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): உள்ளுறை உவமம் ஏனை உவமம் என - உள்ளுறைக்கண் வரும் உவமமும் ஒழிந்த உவமமும் என இருவகையாலும், திணை உணர்வகை தள்ளாது ஆகும். - திணை உணரும் வகை தப்பாதாகும். [ஏகாரம் ஈற்றசை.]

உதாரணம் முன்னர்க் காட்டுதும். (அகத். 49).

குறிப்பு விளக்கம்

1.இனித் தள்ளாது என்றதனானே ' பாஅல் அஞ்செவி ' என்னும் பாலைக் கலியுள் தாழிசை மூன்றும் ஏனையுவமமாய் நின்று கருப்பொருளோடு கூடிச் சிறப்பியாது தானே திணைப்பொருள் தோன்றுவித்து நிற்பன போல்வனவும், ' கரைசேர் வேழம் கரும்பிற்பூக்கும், துறை கேழூரன் ' (ஐங்குறு - 12) என்றாற் போலக் கருப்பொருள் தானே உவமமாய் நின்று உள்ளுறைப்பொருள் தருவனவும்,பிறவும் வேறுபட வருவனவும் இதனான் அமைக்க. இது புறத்திற்கும் பொது.


இதனான் உள்ளுறை உவமமும், ஏனை உவமமுமென உவமம் இரண்டே என்பது. (நச்சி.).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...