புதன், 14 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 44

இலக்கணம் - பாட்டியல் நூல்கள்


இலக்கண விளக்கப் பாட்டியல் (17ஆம் நூற்.)

1.         இலக்கண விளக்கப்பாடடியல் ஆசிரியர்?
வைத்தியநாத தேசிகர் (பாட்டியலின் பதிகம், வைத்தியநாத தேசிகரின் மகன் தியாகராஜ தேசிகர் இயற்றினார் என்கின்றது. இலக்கணவிளக்கப் பாட்டியல் தனிநூலாகவே வழங்கி வந்துள்ளது என்பர்).

2.         இலக்கண விளக்கப் பாட்டியல் கூறும் பிரபந்தக் கூறுகள்?
1. தொடர்நிலைச் செய்யுள் வகை 2. தனிநிலைச் செய்யுள் வகை. இவ்வகைப் பகுப்பு வேறு பாட்டியல் நூல்களில் இல்லை.

3.         தொடர்நிலைச் செய்யுள் பிரபந்த வகைகளின் எண்ணிக்கை?
55 வகைகள்.

4.         தனிநிலைச் செய்யுள் பிரபந்த வகைகளின் தொகை?
22 வகைகள்.

5.         இலக்கண விளக்க உரையாளர் யார்? என்ற பொருளில் முதற்கட்டுரை எழுதியவர்?
ந.மு. வேங்கடசாமி நாட்டார். (நூலாசிரியரும் உரைகளும் ஒருவரல்லர் என்பது அவர் கூறிய முடிவு).

6.         இலக்கண விளக்கத்தை முதன்முதலாகப் பதிப்பித்தவர்?
சி.வை. தாமோதரம் பிள்ளை (1889இல்).

1 கருத்து:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பயனுள்ள குறிப்புகள் முனைவரே..

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...