வியாழன், 1 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 22

இலக்கணம் - எழுத்து, சொல் இலக்கண நூல்கள்


நேமிநாதம் (13 நூற்.)

1.         நேமிநாத ஆசிரியர்?
குணவீரபண்டிதர்.

2.         நேமிநாதம் யார் பெயரால் அமைந்த நூல்?
சமண சமயத் தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் 22 ஆம் தீர்த்தங்கரர் நேமிநாதர் பெயரால் அமைந்தது.

3.         நேமிநாதத்தின் வேறு பெயர்?
சின்னூல் (அளவையால் பெற்ற பெயர். சின்னூல் உரைத்த குணவீர பண்டிதன்  என்பது தொண்டை மண்டல சதகம்).

4.         நேமிநாதப் பகுப்பு?
எழுத்ததிகாரம் (ஓரியல்), சொல்லதிகாரம் (9 இயல்கள் - மரபு என்னும் பெயரின)என இரண்டதிகாரமும், தற்சிறப்புப் பாயிரப் பாடல்கள் உட்பட 99 வெண்பாக்களும் கொண்ட நூல் நேமிநாதம்.

5.         நேமிநாத உரைகாரர்?
உரையாசிரியர் யாரெனத் தெரியவில்லை. பொழிப்புரை, விளக்கவுரை, காட்டு ஆகிய முன்றும் கொண்ட உரை இது. 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்பர்.

6.         சார்பெழுத்து 216 என முதன்முதலாகக் கணக்கிட்டுரைத்தவர்?
குணவீர பண்டிதர் (அவிநயனாரும் கூறியுள்ளார். எனினும் கணக்கு சற்று வேறுபாடுடையது என்பர். அவிநயனார் 228 எழுத்துகள் என்பர்).

1 கருத்து:

Nayagar சொன்னது…

அன்புள்ள நண்பருக்கு
முன்பே கூறியிருந்தது போல் தங்கள் முயற்சி வீண் போகாமல்
வினாடி வினா பகுதியின் தொகுப்பை நூலாய் உருவாக்கி தந்தால்
அனைவருக்கும் பயன் தரும்
உங்கள் தமிழ் பணி வெல்க
நாயகர்

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...